தென்மாட்ட மழை பற்றி வானிலை ஆய்வு மையம் 4 நாட்களுக்கு முன்பே அறிவித்தது
1 min read
Meteorological Department announced 4 days in advance about the Tenmata rains
22.12.2023
சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
- தென்மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.
- வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.
- தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.
- இந்த வருடத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியும், முன்னதாகவே இரண்டாவது தவணையாக ரூ.450 கோடியும் வழங்கப்பட்டது.
- சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மிகவும் அதிநவீனமானது.
- சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே அறிவித்தது.
- ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் மூலம் கனமழை குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது.
- முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.