June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் இளம்பெண் கொலை- குற்றவாளி கைது

1 min read

Young girl killed in Buliangudi. Criminal arrested

22/12/2023
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்
புளியங்குடி – சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9 வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள்.. .. மாரியம்மாள் மகள் மகா லட்சுமியுடன் [வயது 22] தனியே வசித்து வருகிறார் . மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார் கடந்த ஞாயிறு அன்று இரவு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பாததால் மாரியம்மாள் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடியுள்ளார்.

மகாலட்சுமியின் போனும் அணைக்கப்பட்டு இருந்தது மறுநாள் காலை[ திங்கட்கிழமை ] சிந்தாமணியில் மாரியப்பன் [வயது 42] என்பவர் தனது வயலில் விவசாய வேலைகளுக்காக சென்ற போது அங்கு ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து ,அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் முதற் கட்ட விசாரணையில் இறந்தது மாரியம்மாள் மகள் மகாலட்சுமி என்பது தெரிய வந்தது ஞாயிறு இரவு நல்ல மழை பெய்ததால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை அதனை பயன்படுத்தி மகாலட்சுமியை அருகில் உள்ள வயலில் உள்ள நீரில் அழுத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதினர் தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலில் எஸ்ஐ சஞ்சய் காந்தி , உடையார், விஜயபாண்டி முருகேசன், பால்ராஜ், மாடசாமி, கன்னி ராஜ், சந்தன பாண்டி, சுந்தர், செய்யது அலி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமெரா பதிவுகளை தனிபடையினர் ஆய்வு செய்தனர்

இதில் இளம்பெண்ணை ஒரு நபர் பின்தொடர்ந்து செல்வது தெரிய வந்தது. தொடர்ந்த விசாரணையில் அவர் சிந்தாமணி அம்பேத்கார் 9 வது தெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி [வயது 35] என்பதும் ஞாயிறு இரவு மது போதையில் இருந்தார் அப்போது மகாலட்சுமி வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் அவரை வழி மறித்து உறவுக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால் வயலில் உள்ள நீரில் தள்ளி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது போலீசார் கருப்பாசாமியை கைது செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.