தமிழக-கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
1 min read
Police conduct intensive vehicle checks at Tamil Nadu-Kerala border
25-12.2023
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் தமிழக கேரளா காவல் துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளா வுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத் தப்பட்டது.