June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அருகே ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 25 லட்சம் பறிமுதல்

1 min read

Rs. taken without documents near Red Fort. 25 lakh forfeiture

26.12.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் அரசு பேருந்து எடுத்துச் சென்ற ரூ. 25 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புலியரை வழியாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன 50க்கும் மேற்பட்ட கேரள மாநில பேருந்துகளும் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன கடந்த 23ஆம் தேதி தென்காசியில் இருந்து கேரள மாநிலம் ஈரேட்டு பேட்டை என்ற பகுதிக்கு சென்ற அந்த மாநில பேருந்தை ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த அப்துல் மாலிக் (வயது 40) என்பவர் வைத்திருந்த பையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ. 25 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரையும் பணத்தையும் ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அப்துல் மாலிக் பத்தனம்திட்டை பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கொடுப்பதற்காக 25 லட்சம் ரூபாய் கொண்டு செல்வதும் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அந்த நபரையும் பணத்தையும் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர் தென்மலை போலீசார் அப்துல் மாலிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் நாச வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுவதற்காக தீவிரவாத கும்பலுக்கு கொடுத்து அனுப்பப்பட்டதா அல்லது ஹவாலா பணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.