கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
1 min read
Heavy rain warning for 5 days in Kerala
3.1.2024
கேரள மாநிலத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் மழை பெய்தது. இந்த நிலையில் அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் வருகிற 5-ந்தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.