June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் பொதிகை புத்தகத் திருவிழா நிறைவு விழா

1 min read

Pothikai Book Festival Closing Ceremony at Sankaran Temple

3.12.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரண்டாவது பொதிகை புத்தக திருவிழா நிறைவு நாள் விழா நடைபெற்றது

தென்காசி பொதிகை புத்தக திருவிழா 24.12.2023 முதல் 02.01.2024 வரை 10 நாட்கள் 50 புத்தக அரங்குகள் 10 அரசு அலுவலக அரங்குகள் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் சிறப்பாக நடைபெற்றது நிறைவு விழா தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன்
தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த புத்தக திருவிழாவில் கடந்த 10 நாட்களில் மொத்த விற்பனை 50 லட்சம் ரூபாய்க்கும் 19740 பள்ளி மாணவர்கள் 15485 கல்லூரி மாணவர்கள் இரண்டு லட்சத்தி 82 ஆயிரத்து 52 பொதுமக்கள் என மொத்தம் மூன்று லட்சத்து 316177 பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள் விழாவில் பட்டிமன்றம் கலை நிகழ்ச்சி என பல நிகழ்வுகள் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்ககம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்டோருடன் இணைந்து சிறப்பாக நடைபெற்றது விழாவில் பணிபுரிந்த அரசு அலுவலர்கள் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நினைவு பரிசையும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்கள் .

இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் ஒன்றிய குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் தென்காசி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.