சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் சாவு
1 min read
One person died of Corona in Chennai
4.1.2024
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த நபருக்கு தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், சென்னையில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.