June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் 35 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள்- செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்து வைத்தார்

1 min read

Buildings worth 35 lakhs in Red Fort – S. Krishnamurali MLA inaugurated

7.1.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினா் நகர்புற மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று புதிய கட்டிடங்களை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் சுமார் 11.50லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், மேலுார் வாட்டர் டேங்க் வளாகத்தில் சுமார் 8.10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிடம், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர்பிளாக் தரைத்தளம் ஆகியவற்றை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இது நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் .அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மண்டலச் செயலாளா் ராமையா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர் உசேன் நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகரத்துணைச் செயலாளா் பூசைராஜ், நகர்மன்ற துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் திலகர், ஐயப்பன் செந்தில்ஆறுமுகம் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, முத்துப்பாண்டி நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளா் சக்திவேல், செங்கோட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் ஆய்க்குடி கே.செல்லப்பன் வழக்கறிஞா்கள் அருண், சத்தியசங்கர் மற்றும் வார்டு பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நகராட்சி அலுவலா்கள், சுகாதார மேற்பார்வை யாளா்கள் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.