தென்காசியில் ரூ.2.51 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
1 min read
In Tenkasi, the Collector provided welfare assistance of Rs.2.51 lakh.
9.1.2024
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த க்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உதவி உபகரணங்கள் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழக்கும் திட்டத்தின் கீழ் சக்கர நாற்காலிகள் தரை ரூ.3.500/- மதிப்பில் 06 மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் காதொலி கருவிகள் தலா ரூ.5,500- மதிப்பில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.251000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன். வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை. அடிப்பாடை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல் பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 626 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அணைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செ.சங்கர நாராயணன் உதவி ஆணையர் (கலால்) உ.நடராஜன், மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்