நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சாதிச் சான்றிதழ் ரத்து
1 min read
Nellai lawyer Brahma caste certificate cancelled
13.1.2024
திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்ற பிரம்ம நாயகம் என்பவரின் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் என்ற சாதிச் சான்றிதழை சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அர்பித்ஜெயின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்
நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்ற பிரம்மநாயகம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் 1992 ம் ஆண்டு தவறான தகவல்களை கொடுத்து இந்து இசை வெள்ளாளர் பிரிவில் மிகவும் பிற்பட்டோர் என்ற சாதி சான்றிதழை பெற்றுள்ளார். இவர் இசை வெள்ளாளர் வகுப்பைச் சார்ந்தவர் என்று போலியாக சாதிச்சான்றிதழ் பெற்று சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார்.எனவே அவர் போலியாக பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்யக்கோரி செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பிரம்மநாயகம் பெற்ற சாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்பித்ஜெயின் விசாரணை மேற்கொண்டு பிரம்மநாயகம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்றும் பிற்பட்ட வகுப்பினர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் பெற்றிருந்த இசை வெள்ளாளர் என்ற ஜாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை வி எம் சத்திரம் பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்ற பிரம்மநாயகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றுள்ளார். மேலும் நுகர்வோர் நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அரசு அலுவலர்களிடம் தவறான தகவலை கொடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்ற சாதி சான்றிதழை பெற்றதாக கூறி அவரது சாதிச்சான்றிதழை
சேரன்மாதேவி சப் கலெக்டர் அரவிந்த் ஜெயின் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.