June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மது போதையில் கொலை-2 பேர் கைது

1 min read

Alcohol intoxication murder near Tenkasi- 2 arrested

தென்காசி அருகே ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பிளி பகுதியில் மது போதையில் முன்பகை காரணமாக நண்பனை வெட்டிக் கொன்ற அவரது இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி போலீஸ் சரகம் கம்பிளியில் முன்பகை காரணமாக மதுபோதையில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த அவரது இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பிளி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற நபர் காதல் பிரச்சனையால் கடந்த 30.06.2023 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார், சிவா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கம்பிளி பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ராஜ்குமார்(வயது 24) என்ற நபர் தான் காரணம் என கருதிய இறந்த சிவாவின் நண்பர்களான சுரேஷ் மற்றும் சிவா @ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு நபர்களும் இணைந்து பொங்கல் அன்று மாலை 3 மணிக்கு கம்பிளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வைத்து ராஜ்குமார் சுரேஷ் பன்னீர்செல்வம் மூவரும் மது அருந்தி உள்ளனர் அப்போது சிவா தற்கொலை செய்து கொண்டது பற்றி மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ் பன்னீர்செல்வம் இருவரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேல்கனி விசாரணை மேற்கொண்டு மேற்படி கம்பிளி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சுரேஷ்(வயது 23) மற்றும் பரமசிவன் என்பவரின் மகன் சிவா @ பன்னீர்செல்வம் (வயது 23) ஆகிய இரண்டு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து மது போதையில் நண்பனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவல் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.