ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார்
1 min read
Prime Minister Modi took holy bath at Agni Tirtha beach of Rameswaram temple.
20.1.2024
ராமநாத சுவாமி கோவிலில் ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருகி கேட்டார். முன்னதாக, மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார்.

ராமநாத சுவாமி கோயிலில் புனித நீராடிய பின் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற ராமாயணப் பாராயணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சமஸ்கிருதம், அவாதி, காஷ்மீரி, குருமுகி, அஸ்ஸாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி ராம்கதாக்களை (ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை) பாராயணம் செய்தார்கள். அப்போது பிரதமர் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தார்.
வழியெங்கும் காத்திருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்த படி சென்றார். கும்பிட்ட மோடிக்கு, மகிழ்ச்சியுடன் கை காட்டினார் மூதாட்டி ஒருவர். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.