தென்காசி மாவட்ட குற்ற சம்பவங்கள்
1 min read
Tenkasi District Crime Incidents
21/1/2024
தென்காசி மாவட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்றுள்ள குற்ற சம்பவங்களும் காவல்துறை நடவடிக்கையும் வருமாறு
சங்கரன்கோவில் அருகே சொத்துக்காக தந்தையை தாக்கிய மகன் மகள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாளங்குளம் பகுதியில் சொத்து பிரச்சனையில் தந்தையை தாக்கிய மகன் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பாளங்குளம் தெற்கு தெருவில் வசித்து வரும் சங்கிலி பாண்டியன் என்பவருக்கு 2 ஆண் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மகன் மற்றும் மகள்களான முத்துப்பாண்டியன் (எ) மகாராஜா, முத்துலட்சுமி(எ ) சின்னத்தாய் மற்றும் மாரித்தாய் ஆகியோர் இணைந்து அவர்களின் தந்தையான சங்கிலி பாண்டியனிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கூறி பிரச்சினை செய்து அவரை தாக்கியுள்ளனர் தடுக்க வந்த அவர்களின் தாயான ஆவுடையம்மாளை யும் தாக்கி அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி களையும் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சங்கிலி பாண்டியன் அய்யாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் அந்தோணி ஜெயராஜ் விசாரணை மேற்கொண்டு களப்பளாங்குளம் சங்கிலி பாண்டியன் மகன் மற்றும் மகள்களான முத்துப்பாண்டியன் என்ற மகாராஜா(வயது 48), முத்துலட்சுமி என்ற சின்னத்தாய் (வயது 40) மற்றும் மாரித்தாய்(வயது 36) ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து முத்து பாண்டியன் மற்றும் முத்துலட்சுமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.
தென்காசி அருகே நண்ப னை தாக்கியவர் கைது.
தென்காசி அருகே உள்ள இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த காசி முருகேசன் என்பவரது நண்பரான அய்யப்பனின் வாகனம் கடந்த 15.01.2024 அன்று பழுதாகி சாலையில் நிற்பதாக காசி முருகேசனை தொலைபேசியில் அய்யப்பன் தொடர்பு கொண்டு உதவி கேட்டதன் பேரில் காசி முருகேசன் மெக்கானிக்கை அனுப்பி சரி செய்துள்ளார்.
இந்நிலையில் மெக்கானிக்குக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஐயப்பன் இதுவரை கொடுக்காமல் இருந்ததால் காசி முருகேசன்வாகனம் சரி செய்ததற்கான பணத்தை கேட்டுள்ளார்,
இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் கட்டையால் காசி முருகேசனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த காசி முருகேசன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து காசி முருகேசன் கொடுத்த புகாரின் பெயரில் இலத்தூர் சார்பு ஆய்வாளர் வரதராஜன் விசாரணை மேற்கொண்டு கணக்கப்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த மாசாணம் என்பவரின் மகன் அய்யப்பன்(வயது 27) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.
புளியங்குடி அருகே பெண்ணுக்கு மிரட்டல் ஒருவர் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் அவரது பக்கத்து வீடான இராமராஜா மற்றும் அவரது உறவினரான குமார் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இராமராஜா மற்றும் குமார் ஆகியோர் மது போதையில் சாந்தியிடம் பிரச்சனை செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து சாந்தி புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன் விசாரணை மேற்கொண்டு கீழப்புதூர் பொட்டல் தெருவை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் இராமராஜா(வயது 45) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் தென்காசி மாவட்டத்தில் 12 இடங்களில் மாவட்ட காவல்துறை சார்பில் போக்சோ. குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற தாகவும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.