கோவிந்தப்பேரியில் 10 லட்சம் வளர்ச்சி பணிகள்
1 min read
10 lakh development works to start in Govindapper
23.1.2024
தென்காசி மாவட்டம் கோவிந்த பேரி ஊராட்சியில் ரூ.6. 25 லட்சம் செலவில வாறுகால் அமைத்தல் மற்றும் 3.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகள் துவக்க விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாங்கபுரம் பகுதியில் ரூ. 6,65,000 செலவில் வாறுகால் அமைக்கும் பணி, மற்றும் கோவிந்தப்பேரி கோட்டியப்பர் கோவிலுக்கு மேற்கே 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார்.கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவிந்தப்பேரி ஊராட்சி துணைத் தலைவர் இசையேந்திரன், ஊராட்சி செயலாளர் மூக்காண்டி, 5- வது வார்டு உறுப்பினர் நாகராஜன் 4- வது வார்டு உறுப்பினர் சுகிர்தா மற்றும் மாரித்துரை, கிருஷ்ணன், செந்தில்குமார், சிங்கக்குட்டி சிவா, மீனா, ராஜா முருகன், கண்ணன் மற்றும் 30க்கும் மேற்பட்ட மகளிரும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.பாண்டியன், மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
i