விஜயகாந்த் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
1 min read
Padma awards announced to 5 people from Tamil Nadu including Vijayakanth
26.1.2024
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் உள்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருதுக்கு கோவையை சேர்ந்த வள்ளி கும்மி, ஒயில் ஆட்ட நடன கலைஞர் பத்ரப்பன் தேர்வாகியுள்ளார். புராண கதையான வள்ளி முருகன் கதையை ஒயிலாட்டத்தில் சித்தரித்து காட்டும் இவர், அதில் அதிக அளவில் பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதை பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதையடுத்து இந்தியாவின் முதல் பெண் யானை பாகனான பர்பதி பாருவா பெயரும் இடம் பெற்றுள்ளது. தெற்கு அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயி கே.செல்லம்மாள் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பத்ம விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
விஜயகாந்த், சிரஞ்சீவி, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கும் 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன், பத்ம விபூஷன், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.