தென்காசி அருகே சொத்துக்காக தன் தந்தை கொலை செய்துள்ளதாக மகள்கள் புகார்
1 min read
Daughters complain that their father killed them for property near Tenkasi
1.2.2024
தென்காசி அருகே சுரண்டையில் பரம்பரை சொத்துக்காக தனது தந்தையின் உடன் பிறந்தவர்கள் தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக அவரது மகள்கள் தென்காசி கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த பூலுடையார் தேவர் மகன் சண்முகவேல் என்ற வெள்ளத்துரை என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் கடந்த 23ஆம் தேதி கோவில் கொடை திருவிழாவிற்கு சென்று விட்டு சென்ற தந்தை 24 ஆம் தேதி சுரண்டை அருகே உள்ள இரட்டைக் குளம் கிராமம் அருகே உள்ள இரட்டைக் குளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரை சுரண்டை காவல் துறையினர் மீட்டு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் குடும்பத்தினர் உடலை தகனம் செய்தனர் இந்த நிலையில் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவரது மகள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மனு அளித்துள்ளனர்
எனது தந்தையின் மரணம் குறித்து சுரண்டை காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனது தாத்தாவிற்கு இரண்டு தாரம் முதல் தாரத்திற்கு எனது தந்தையுடன் பிறந்தவர்கள் ஐந்து பெண்கள் உள்ளனர். இரண்டாவது தரத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்துள்ளனர். இதனால் தனது தாத்தாவின் சொத்தை பிரிப்பதில் தந்தைக்கும் அவரது தங்கைகளுக்கும் (எனதுஅத்தைகளுக்கும் )இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. எனது தந்தையை அவர்கள் இறப்பதற்கு முன் மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில் எங்களது தந்தையின் இறப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தனது தந்தையின் தங்கைகள் அவரது கணவன்மார்கள் மற்றும் எனது சித்தப்பா ஆகியோர் சேர்ந்து எனது தந்தையை கொலை செய்து குளத்தில் வீசி இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். மேலும் எங்களை மிரட்டி வருகின்றனர். மேலும் ஊர் கூட்டம் என்ற பெயரில் தங்களை மிரட்டி வருவதாகவும் ஊர் கூட்டத்தின் காலில் எங்களை விழ சொல்வதாகவும் கூறினர்.
எனவே எனது தந்தை மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரட்டைக் குளம் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லை அங்கே எப்படி சென்றார் அவரை கூட்டி சென்றது யார் என்ற சந்தேகம் உள்ளது தற்கொலை செய்வதற்கு சுரண்டையில் ஏராளமான இடங்கள் இருக்கின்ற பொழுது அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று இறக்க வேண்டிய அவசியம் எனது தந்தைக்கு இல்லை என சந்தேகத்தை எழுப்பி உள்ளார்
இது குறித்து காவல்துறையிடம் கேட்ட பொழுது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு இறப்புக்கான காரணம் தெரிய வரும் அதன் பின்னர் காவல்துறை வழக்கை மாற்றி விசாரணையை மேற்கொள்ளும் என தெரிவித்தனர் இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.