கடையநல்லூரில் கடைகளுக்கு சீல் வைத்த வக்பு வாரிய அதிகாரிகள்
1 min read
Waqf Board officials sealed shops in Kadayanallur
1.2.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள வக்குப்பு வாரிய தர்காவிற்கு சொந்தமான 10 கடைகள் பத்தாண்டுகள் வாடகை வழங்காததால் கடையநல்லூரில் வக்பு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடையநல்லூரில் சையது அப்துல்லா கலீஃபா தர்காவிற்கு சொந்தமான கடைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு பொதுவுடமை அதிகாரி உத்தரவின் படி வக்பு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடையநல்லூரில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான வடக்கு அய்யாபுரம் தெருவில் தங்கள் கட்சிக்கு பாத்தியப்பட்ட. சையது அப்துல்லா கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவை தங்கள் கட்சி ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் பராமரித்து வந்தனர். இதை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக செயல்பட்டதால் 2011ம் ஆண்டு இரு பிரிவுக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனி பிரிவுகளாக செயல்பட்டனர்.
இந்த தர்காவிற்கு மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டுடியோ முடி திருத்தகம் ரெடிமேட் கடை ஐஸ்கிரீம் கடை ஹார்டுவேர்ஸ் கடை என 10க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன.
வக்பு வாரியம் நியமித்த முத்தவல்லியான டாக்டர் பட்டாணி அப்துல் மஜித் என்பவரிடம் வாடகை செலுத்தாததால் 2011ம் ஆண்டு முதல் இன்று வரை வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட முத்தவல்லி மஜீத்திடம் கடையில் வாடகையை வழங்க வலியுறுத்தி
சென்னை வக்பு வாரிய பொது உடைமை அதிகாரி முன்னிலையில் விசாரணை செய்ததில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகையை வழங்காத கடைகளை சீல் வைத்து கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தனர். அதனடிப்படையில் 1 மாதம் அவகாசம் வழங்கியும் வாடகை வழங்காமலும் கடையை காலி செய்யாமல் இருந்ததால் வாடகை வழங்காத 10 கடைகளையும் நேற்று திருநெல்வேலி வக்பு வாரிய கண்காணிப்பாளர் அப்துல்வகாப், ஆய்வாளர்கள் செய்யது ரிஜா, ஷேக்அப்துல்லா, பர்கத்துல்லா, கடையநல்லூர் காவல் இன்ஸ்பெக்டர் ராஜா, விஏஓ ராமச்சந்திரன் தலைமையில் வக்பு அதிகாரிகள் அனைத்து கடைகளையும் பூட்டி சீல் வைத்து தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இருப்பினும் நடுஅய்யாபுரம் தெருவுக்கு எதிரில் செயல்படும் ஐந்து கடைகளில் வாடகையை வக்பு வாரியத்தால் அங்கீகாரம் இல்லாத முத்தவல்லி இடம் வழங்கியதாக கடையின் உரிமையாளர்கள் கூறினார் ஆண்டு முழுவதும் வாடகை வழங்கிய நிலையில் எங்களின் கடைகள் சீல் வைக்கப்பட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக ஆகிவிட்டது வக்பு வாரியம் யாரிடத்தில் வாடகையை வழங்க சொல்கிறதோ அவர்களிடம் வாடகை வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக தர்காவுக்கு சொந்தமான கட்டிடத்தில் கடை நடத்தி வரும் கடைக்காரர்கள் குறிப்பிட்டனர்.