June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மளிகை கடையில் ஒன்றரை லட்சம் கொள்ளை

1 min read

One and a half lakh robbery in Tenkasi grocery store

5.2.2024
தென்காசி மளிகை கடையில் கதவை உடைத்து ரூபாய் ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நல்லகரம் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 52) இவர் தென்காசி சுவாமி சன்னதி பஜார் கீழ் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் கதவை உடைத்து இருப்பதும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஜான் பீட்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையை பார்வையிட்டனர்.மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது நள்ளிரவில் முகத்தை துணியால் மூடிய மர்மநபர் ஒருவர் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கடைக்குள் இறங்கி வருவதும், கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

நள்ளிரவில் மளிகை கடையில் பின்புறம் உள்ள வீட்டின் மாடியில் இருந்து மர்ம நபர் மளிகை கடை கட்டிடத்திற்கு தாவி குதித்து வந்துள்ளார். பின்னர் மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கி மளிகை கடையில் மூன்றாவது தளத்தில் இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று கைவரிசையை காட்டி சென்றது. தெரிய வந்துள்ளது.

இது பற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.