June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் டிட்டோ ஜாக் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம்

1 min read

Protest on behalf of Tito Jack in Tenkasi

5.2.2024
தென்காசி மாவட்ட டிட்டோ ஜாக் சார்பில், அரசாணை 243 ஐ ரத்து செய்திடவும், அரசாணை 243க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், கல்வித் துறை இயக்குனர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கக் கோரியும், கருப்பு பட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்து மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஒருங் கிணைப்பாளரும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் தென்காசி மாவட்ட செயலாளருமான செய்யது இப்ராஹிம் மூசா தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாநில செயற்குழு உறுப்பி னர் ராஜ்குமார், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாண்டி யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி மாவட்ட ஒருங்கிணைப் பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலை வருமான ஆரோக்கிய ராசு அனைவரையும் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கல்வித் துறையில் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை பெரிதும் பாதிக்கும் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்ட அர சாணை 243 உடனடியாக ரத்து செய்திட வேண்டும். இவ்வரசாணைக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடுகளில் தமிழக அரசின் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குனர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண் டும். டிட்டோ ஜாக்கின் 12 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடக் கோரியும் கோரிக்கை முழக்க கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் (சண்முகநாதன்பிரிவு) கனகராஜ் குமரன், தமிழ்நாடு , ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ரமேஷ், சுதர்சன், மாடசாமி,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற(தியோடர் பிரிவு) தங் கத்துரை,அகஸ்டஸ்ஜாண், ராஜசேகர், ராஜதுரை. தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் சேவியர் ஞானம், மகளிர் அணி ரேச்சல், மல்லிகா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரசாணை 243 ரத்து செய்ய கோரியும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற பிப்ரவரி 19 சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என முடிவு செய்யபட்டுள்ளதாக ஆர்ப் பாட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.