June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற சவால்களை பா.ஜ.க. அரசு முறியடித்தது: வெள்ளை அறிக்கையில் தகவல்

1 min read

BJP has taken up the challenges left by the Congress government. Government overruled: Information in the White Paper

8.2.2024
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகால மன்மோகன் சிங் அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் 2014ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது, டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்து என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்ததாகவும், காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும். எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்றும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்து, இந்தியாவை நிலையான வளர்ச்சி பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்து, இந்தியாவை நிலையான வளர்ச்சி பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தின் எல்லை சுவரின் ஒரு பகுதி இன்று காலை 11.10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட அறிக்கையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 முதல் 4 இருசக்கர வாகனங்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.