தென்காசியில் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
1 min read
Jacto-Jio strike preparatory conference in Tenkasi
11.4.2024
தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போராட்ட ஆயுத்த மாநாடு நிகழ்ச்சிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பிச்சைகனி,ராஜேந்திரன், சண்முகசுந்தரம், முருகேஷ், ஆரோக்கியராசு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மாரிமுத்து, வெங்கடேஷ், ரமேஷ், வேல் ராஜன் , இசக்கித்துரை, மார்த்தாண்ட பூபதி,, முத்துக்குமார், சேகர் ஜெயலட்சுமி, பிரேம்குமார், ஐயப்பன்ஆகியோர் போராட்ட வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் தோழர் துரைசிங் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்.
இந்த போராட்ட ஆயுத்த
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:- பிப்ரவரி 15ல் நடைபெறும் ஜாக்டோ- ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் 100% பங்களிப்போடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. மேலும்
பிப்ரவரி 26 முதல் நடைபெறும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் அனைத்து பள்ளி கல்லூரி அலுவலகங்கள் முழுவதையும் அடைத்து வெற்றிகரமாக நடத்துவது எனவும் ஏக மனதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
01.04.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு. உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப் பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண்.243 நாள்:21.12.2023 ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள். கண்காணிப் பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண் பாட்டினைக் களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு சிஏஎஸ் ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் மக்கள் நல பணியாளர்கள் ஆகியோரு க்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி பி.கே.மாடசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.