தென்காசி நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
1 min read
Sapling Planting Ceremony in Tenkasi Municipal Area
12.2.2024
தென்காசி நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமை தாங்கினார் .நகர மன்ற துணைத் தலைவர் கேஎன்எல்.சுப்பையா
நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி நகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் பூங்காவினை சுத்தமாக வைத்திருக்க கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
தொடர் நிகழ்வாக யானைப்பாலம் படித்துறைறை சுத்தம் செய்யும்பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன் மகேஸ்வரன் மாதவ ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் முத்துமாரியப்பன்
பொருளாளர் ஷேக்பரீத் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன் மாணவரணி மைதீன், டாக்டர் பிஸ்வாஸ்,
சாமுவேல் கனகராஜ், ஷேக்,பசுமை தென்காசி முஸ்தபா குடியிருப்போர் நலசங்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள், பொது மக்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் தூய்மைபணியாளர்கள் டிநிசி ணியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.