ஆய்க்குடி ஜெ.பி.கல்லூரியில் யோகாசன நோபல் உலக சாதனை நிகழ்ச்சி
1 min read
Yogasana Nobel World Record Program at JP College, Ayikudi
12.2.2024
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பெடரேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில்
தண்ணீரின் அவசியம் மற்றும் சேமிப்பு குறித்து 300 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்ற
யோகாசன நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு யோகா பெடரேஷன் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதனை கொண்டாடும் வகையில் நல்ல பயனுள்ள கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தண்ணீரின் அவசியம் குறித்தும் அதனை சேமிப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமஜேந்திரா ஆசனத்தை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்த படி மூன்று நிமிடங்கள் அர்த்த.மஜேந்திரா ஆசனத்தை செய்து உலக சாதனை நிகழ்த்தினார்கள்..
இந்த நிகழ்ச்சிக்கு ஆய்க்குடி ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகி அருட்சகோதரி. பி.ஹேம்லெட் முன்னிலை உரை ஆற்றினார்.
ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உலக சாதனைச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை நோபுள் உலக சாதனை அமைப்பால் கொடுக்கப்பட்டது. இவற்றை ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
முதல்வர் முனைவர். ஜ.மைக்கேல் மரியதாஸ் கல்லூரியின் சார்பில் பெற்றுக் கொண்டார்.
யோகாசன விளையாட்டுச் சங்கத்தின் தேசியத் தலைவர் முனைவர். சொக்கலிங்கம் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குச்
சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தார்.
நோபுள் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை அதிகாரி கே.கே.வினோத் யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினார்.
தேசிய மற்றும் தமிழக யோகாசன விளையாட்டுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர். அரவிந்த் லட்சுமி நாராயணன் தொடக்க உரை ஆற்றினார்.தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் செயலாளர்கள் சந்தியா வி.பரணி தரன், யோகா பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்தனர்.
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் யோகா சாதனை புரிந்தவர்களின் சாதனைகள் மேடை ஏற்றப்பட்டன. சிறப்பாக நடந்த இந்த நிகழ்வு மூன்றாம் ஆண்டு காட்சித் தொடர்பியல் துறை மாணவர் செல்வன். வெ.தெய்வ ஆனந்த பாலன் மற்றும் இரண்டாம் ஆண்டு காட்சித் தொடர்பியல் துறை மாணவி.செல்வி. காயத்ரி ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். அ.இராஜன் ஜான் வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கே.தம்பிரான் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் தன்னார்வலர் களாகக் கலந்து கொண்டு நிகழ்வு சிறக்க ஒத்துழைப்பு வழங்கினர்.முடிவில் யோகா பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.