மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி -கடையநல்லூர் மாணவர் சிறப்பிடம்
1 min read
Zone Level Science Fair Competition – Kadayanallur Student Excellence
14.2.2024
கோவில்பட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியும் இந்து தமிழ் திசையும் இணைந்து பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு களுக்கு வழிகோலவும் மண்டல அளவிலான அறிவியல் திருவிழா நேஷனல் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஹிதயத்துல்லா கலந்து கொண்டு தன்னுடைய பதிய கண்டுபிடிப்பான பெண்கள் பாதுகாப்பு கருவியும் ,கழிவு பொருளிலிருந்து செய்த கலவை எந்திரமும் அனைவருடைய பாராட்டினைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவரை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாராட்டி பரிசினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.ராஜகோபால் வணிக வியல் ஆசிரியர் ராஜன் முதுகலை வேதியியல் ஆசிரியர் பீர்முகமது முதுகலை தமிழாசிரியர் சு.சண்முகசுந்தரம் வகுப்பு ஆசிரியர் திருமலைச் செல்வி முதுகலை இயற்பியலாசிரியர் ராஜேஷ் குமார் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்தையா மாணவர் ஹிதயத்துல்லா விற்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.