கல்விக்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு- அதிகாரிகள் மீது நடவடிக்கை
1 min read
Irregularity in central government funds for education- action against officials
15.2.2024
கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.
முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.