கனிமவள லாரிக்கு நேர கட்டுப்பாடு தேவை -ரவிஅருணன் வலியுறுத்தல்
1 min read
Mineral truck needs time control – Ravi Arunan insists
16.2.2024
முன்னாள் எம்.எல்.ஏ.வும்
இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவருமான கே.ரவி அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில தினங்களாக கனிமவள வாகனங்களால் உயிரிழப்புகள் அதிகரித்ததை அடுத்து தென்காசி மாவட்டத்திலும் இதே போல் விபத்துக்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பள்ளி நேரங்களில் செல்லக்கூடிய கனிமவள வாகனங்களை தடை செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தோம்
அதற்கு உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை அணுகி தீர்வு கண்டு கொள்ளலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
தென்காசி மாவட்டத்திலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும்
இதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தினமும் காலை 8.30 முதல் 10 மணி வரையிலும் மாலை 3.30 முதல் 5 மணி வரையிலும் கனிமவள வாகனங்களை சாலையில் பயணிக்க உடனடியாக தடை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
காலம் தாழ்த்தினால் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் இதை தீவிரமாக கொண்டு சென்று அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.