June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 1886 பேருக்கு 3.77 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1 min read

3.77 crore welfare assistance to 1886 people in Tenkasi

17.2.2024
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூ3 கோடியே 77 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க. மக்களுடன் முதல்வர் முகாம் தென்காசி மாவட்டத்தில் 22.12.2023 முதல் 06.01.2024 வரை 7 கட்டங்களாக 55 முகாம்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 3022 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களில் 3012 மனுக்கள் தீர்வு காணப்பட்டு இன்றைய தினம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனை மனதில் வைத்து செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விரைவாக எளிய முறையில் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் இத்திட்டத்தை அரசின் அனைத்து திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சு.தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர். தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மு.கனகராஜ் , தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து. செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன். கடையநல்லூர் வட்டாட்சியர் சுடலைமணி. சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன். சிவகிரி வட்டாட்சியர் ரவிக்குமார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மாவட்ட மேலாளர் (மின்ஆளுமை) துர்கா, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அலுவலக பொதுமேலாளர் ஹரிஹரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.