June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாட்டப்பத்து ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா

1 min read

Opening ceremony of Pattapattu Panchayat Council office

18.2.2024
தென்காசி ஊராட்சி ஒன்றியம், பாட்டப்பத்து ஊராட்சியில் ரூபாய் 23 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பாட்டப்பத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்ட நிதி மூலம் ரூபாய் 23 லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாட்டப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் மாலதி பொன்னுச்சாமி தலைமை தாங்கி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பாட்டப் பத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள் மகேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப் பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் புவனா, சுனந்தா ஆகியோர் கேக் வெட்டி பொதுமக்க ளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜி.மாரியப்பன், எம்.சக்திகுமார், பாக்கியலட்சுமி, மணிகண்டன், எம்.சசிகலா, வி.கற்பகவிநாயகம்பிள்ளைகே.சுப்பிரமணியன் எஸ்.மகேஸ்வரி, பாட்டப்பத்து திமுக கிளைச் செயலாளர் சண்முகவேல் (எ) சங்கிலி, அரசு ஒப்பந்தக்காரர் பழனி, மத்தளம்பாறை நயினார் ராஜ், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஆல்பர்ட், ஆரோக்கியராஜ், குத்தாலிங்கம், கு.மூர்த்தி அங்கன்வாடி அமைப்பாளர் கள் மாரியம்மாள், சுப்புலட்சுமி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.