June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி வேலைவாய்ப்பு முகாமில் 206 பேர்களுக்கு பணிநியமன ஆணை

1 min read

Recruitment order for 206 people in Tenkasi employment camp

18.2.2024
தென்காசி மாவட்ட நிர்வாகம். வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட 206 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி. ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இம்முகாமில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 74 வேலை யளிக்கும் நிறுவனங்கள். 5 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1020 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் 115 ஆண் வேலை நாடுநர் களுக்கும் 91 பெண் வேலைநாடுநர்களுக்கும் என மொத்தம் 206 வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு 41 வேலைநாடுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் மேலும் இம்முகாமில் 18 நபர்கள் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இம்முகாமில், திட்ட இயக்குநர். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இரா.மதிஇந்திரா பிரியதர்ஷினி மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு|(பொ) டாக்டர் கா.சண்முக சுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்மு.கூ.பொ) ஹரிபாஸ்கர் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ராமர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *