June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் நாளை நிர்மலா சீதாராமன், அண்ணாமலை பங்கேற்கும் கூட்டம்

1 min read

Meeting to be attended by Nirmala Sitharaman and Annamalai tomorrow at Shankaran temple

22.2.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை 23.02.2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இதுபற்றி தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது

தென்காசி மாவட்ட பாஜக சார்பில் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் வெள்ளிக்கிழமை (பிப். 23-நாளை) பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே ஏ ராஜேஷ் ராஜா தலைமை தாங்குகிறார்.மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலர் பொன்.வி.பாலகணபதி, தென்காசி மாவட்ட பாஜக மாவட்டப் பார்வையாளர் மகாராஜன், விருதுநகர் மாவட்டத் தலைவர் சி.சரவணதுரை, நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் அ.ஆனந்தன், இணை அமைப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசுகின்றனர். சங்கரன்கோவில் நகரத் தலைவர் எஸ்.கணேசன் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக வின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.