June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

வல்லத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

1 min read

State Level Electronic Kabaddi Tournament in Vallam

26.2.2024

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வல்லத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வல்லம் பத்ரூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 3ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி மற்றும் முதலாம் ஆண்டு சூரிய ஒளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு இறுதி போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளரும், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கனிமொழி, தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி, தலைமை செயற்குழு உறுப்பினரும், வடகரை பேரூராட்சி மன்ற தலைவருமான ஷேக் தாவூது, தென்காசி யூனியன் சேர்மன் ல்லம் மு.சேக்அப்துல்லா, பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த் திலக், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், முன்னாள் பொறியாளர் அணி கபில் தேவதாஸ், இளைஞர் அணி ஹரி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தர்ம செல்வி, பெரிய புள்ள வலசை காளிராஜ், மற்றும் போட்டி ஒருங்கிணைப் பாளர்கள் பீர்முகமது, மசூது (எ)மநிஜாம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள், விழாக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.