June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் பத்திர வழக்கு: கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்தது

1 min read

Election bond case: Supreme Court extends deadline

4.3.2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவரங்களை வெளியிட மார்ச்.06 ம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் பாங்கிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை 2017-ல் கொண்டு வந்தது. இதன்படி தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்புப் பணத்தை தடுக்கலாம் என்பதால், தேர்தல் பத்திரங்கள் 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என ஐந்து மதிப்புகளில் தயாரிக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும், அவை விற்கப்படும் என்றும் தெரிவித்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என கடந்த பிப்.17-ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஸ்டேட் பாங்க் உடனடியாக, தேர்தல் பத்திரங்கள் விற்பதை நிறுத்த வேண்டும்; இதுவரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், அதன் மதிப்பு, அதை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், மார்ச் 3ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன்தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மார்ச் 6-ம் தேதிக்குள் தலைமை தேர்தல் கமிஷனுக்கு முழுவிவரத்தை ஸ்டேட் பாங்க் அளிக்க வேண்டும் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.