June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மொபைலை கணவர் பறித்ததால் 2 குழந்தையுடன் தாய் தற்கொலை

1 min read

Mother commits suicide with 2 children as her husband snatches her mobile phone

4.3.2024
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் எதிரே ஏரி புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் கோபிநாத், 35, மரம் இழைப்பகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெண்ணரசி, 29. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.

நேற்று காலை கோபிநாத், தன் மனைவி மற்றும் மகள் கிருத்திகா, 7, மகன் மோனிஷ், 4, ஆகியோரை பைக்கில், விழுப்புரம் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றார். பின், மனைவி, குழந்தைகளை பஸ்சில் ஏற்றி, விக்கிரவாண்டிக்கு அனுப்பி வைத்தார்.

அரசு போட்டித்தேர்வு எழுத இருப்பதால், கோச்சிங் சென்டருக்கு செல்வதாக கூறிச் சென்ற கோபிநாத், 10:45 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. உடைத்து உள்ளே சென்றபோது, மனைவி மற்றும் இரு குழந்தைகள் துாக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த விழுப்புரம் போலீசார், கோபிநாத்திடம் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், பெண்ணரசி தன் தாயுடன் மொபைல் போனில் அடிக்கடி பேசியதை கண்டித்ததால், கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மூன்று நாட்களுக்கு முன் பெண்ணரசியிடம் இருந்து போனை பறித்து கோபிநாத் உடைத்துள்ளார்.

மனமுடைந்த நிலையில் இருந்த பெண்ணரசி, நேற்று இரு குழந்தைகளையும் துாக்கிட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துஉள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.