June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு புத்தகம்-கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்

1 min read

Sanatana History book by Vaikundaswamy-published by Governor RN Ravi

4.3.2024
கலியுகத்தில் கலியிடம் இருந்து மக்களை பாதுகாக்க அவதரித்தவர்தான் அய்யா வைகுண்டர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அவரது அவதாரத்தலம். அவர் மக்களுக்கு நல்வழியை அகிலத் திரட்டு மூலம் வெளிப்படுத்தினார். அவரது அகிலத்திரட்டு சனாதன கொள்கையை தாங்கி உள்ளது. அதாவது சனாதன மனித தர்மத்தை விளக்குவது. அதேபோல் அகிலத் திட்டும் தர்மத்தை எடுத்துக்கூறுவதாகும்.
இதனை விளக்கும் வகையில் வழக்கறிஞர் ராமலிங்ம் அவர்கள் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீவைகுண்ட சாமி அருளிய சனாதன வரலாறு என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
இதன் வெளியிட்டு விழா இன்று சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மணலி அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகி துரைப்பழம், அய்யாக வழி சேவை அமைப்பின் செயலாளர் சுரேஷ் பொன்னு நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சென்னை அம்பத்தூர் வைகுண்ட திருப்பதி நிர்வாகி அருளானந்தம் அகிலத்திட்டு அம்மானை பாடினார்.
சமுதாய முன்னேற்றத்தில் அய்யா பதிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் அகிலம் அகாடமியின் நிறுவனர் டி.சீதாபதியும் அகில திரட்டு அம்மானை கூறும் சனாதன தர்மம் என்ற தலைப்பில் அய்யா வழி மக்கள் இயக்கம் டி.பிரேம் சங்கரும் பேசினார்கள்.
புத்தகத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட நெல்லை மாவட்டம் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரம்பதி நிர்வாகி எம்.ராமநாதன் பெற்றுக் கொண்டார். நூல் ஆசிரியர் ராமலிங்கம் புத்தகத்தை பற்றி உரையாற்றினார். முன்னதாக மணலி வைகுண்ட தர்மபதி வழக்கறிஞர் ஐவன்ஸ் தங்கப்பன் வரவேற்றார். வழக்கறிஞர் நிதிஷ் ராஜா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியி்ல் ஆலோசகர் முருகானந்தம், தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.