தென்காசியில் தொடரும் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
1 min read
The revenue officers’ wait-and-see strike continues in Tenkasi
6/3/2024
தென்காசியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கடந்த மூன்று நாட்களாக இரவும் பகலும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக வருவாய் துறையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கடந்த மாதம் முதல் ஆர்பாட்டம் உண்ணாவிரதம் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பகல் மற்றும் இரவிலும் தங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த காத்திருப்புப் போராட்டத்தில் மதியம் போராட்ட களத்திலேயே கேஸ் அடுப்பு வைத்து சமையல் செய்து அங்கேயே உணவு அருந்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் விஜயகுமார், கணேசன், ரமேஷ், வேல்முருகன், மாவட்ட இணைச்செயலாளர்கள் சீனிவாசன், பரசுராமன், கற்பகராஜ், ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சீனிப்பாண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் அரசு ஊழியர் சங்க நிர்வாகி வேல்ராஜ் பட்டு வளர்ச்சி துறை சார்பில் வெங்கடேஷ் வேலைவாய்ப்பு சங்கம் சார்பில் மார்த்தாண்ட பூபதி தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் சேகர் மாவட்டம் மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.தென்காசி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் இசக்கி ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.