June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் சிறுமிகளிடம் சில்மிஷம் போக்சோவில் ஒருவர் கைது

1 min read

A person was arrested in Chilmisham-Poxo with girls in Buliangudi

7/3/2024
தென்காசி மாவட்டம்
புளியங்குடியில் சிறுமிகளிடம் சில்மிஷம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் மூன்று பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து , அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து தலைமை ஆசிரியை ஆஜர் அணிவகுப்பின் போது , பள்ளி குழந்தைகளிடம் அறிவுரை வழங்கும் போது,

உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நான்கு சிறுமிகளும் தலைமை ஆசிரியரிடம் நாங்கள் வீட்டின் அருகே விளையாடும் போது காட்டு ராஜா என்பவர் தங்களது உடலில் உள்ள பகுதிகளை தொட்டதாக கூறினர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார்
காட்டு ராஜா(48) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.