இடைகால் ஊராட்சியில் கால்நடை மருந்தகக்கட்டிடம்- கலெக்டர் திறந்து வைத்தார்
1 min read
Veterinary dispensary was inaugurated by the Collector in Ethikal Panchayat
7.3.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இடைகால் ஊராட்சியில் ரூ.34,50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கால் நடை மருந்தக கட்டடத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இடைகால் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தில் மரக்கன்றுகளை நட்ட பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பேசியதாவது:-
இன்று திறக்கப்பட்டுள்ள இடைகால் கால்நடை மருந்தகதில் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல் சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை மற்றும் அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள் ளப்படும்.
புதிய கால்நடை மருந்தகத்தினால் இடைகால், நயினாரகரம், பொய்கை ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகள் பயன்பெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார..
முன்னதாக திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு ஸ்ரீஹரி வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வாராட்சி குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் சுப்பம்மாள் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், இடைகால் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தம்மாள், இலங்கமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தென்காசி கட்டட கட்டுமா னம் மற்றும் பராமரிப்புப் பணி கோட்ட செயற்பொறி யாளர் அனிதா சாந்தி, மற் றும் உறுப்பினர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இடைகால் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தனலெட்சுமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்