தென்காசியில் அவள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி-ஆட்சியர் கலந்து கொண்டார்
1 min read
Her workshop program in Tenkasi
9.3.2024
தென்காசி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய அவள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம். மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய அவள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மார்ச் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் முனைய விரும்புவோர்களின் புத்தாக்க திறமைகளை மேம்படுத்தும் வண்ணம் அவள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்ட படுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவள் பயிற்சி பட்டறையைத் துவக்கி வைத்து மாணவிகளோடு கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 40 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களின் புத்தாக்க திறமைகளை உருவாக்கும் வண்ணம் அவள் பயிற்சி பட்டறை இன்று துவங்கி உள்ளது. இதன் மூலமாக மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படுகிறார்கள். இந்த பயிற்சியின் மூலமாக இன்னும் பல பெண் தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். இதன் மூலம் நமது பொருளாதாரம் மற்றும் நம்மைச் சார்ந்தவர்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்று பேசினார்கள்.
தங்களது புத்தாக்க திட்டங்களை உருவாக்குவதற்காக ஹேக்கத்தான் மூலம் ரூ.73 லட்சம் பெற்ற ஆய்க்குடி ஜெ.பீ.பொறியியல் கல்லூரி மாணவிகள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப் பட்டார்கள்.இதில் கலந்து கொண்ட மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சிகளைக் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் கலந்து கொண்டார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் என்.ராகுல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சியளித்தனர்.