தென்காசியில் 763 பேர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா
1 min read
Free housing plot for 763 people in Tenkasi
10.3.2024
தென்காசி மாவட்டத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு 763 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி யில் மாவட்ட ஆட்சித்தலை வர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக ளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க பொதுமக் களின் தேவைகளை கேட்டறிந்து நாள்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.அதன் ஒரு பகுதியாக இன்றைய திளம் கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டத்தில் 40 பயனாளி களுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவிற் கான ஆணைகளையும், ஆலங்குளம் வட்டத்தில் 65 இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், வீர கேரளம்புதூர் வட்டத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ.6.49 இலட்சம் மதிப்பிலான இல வச வீட்டுமனை பட்டவிற் கான ஆணைகளையும் செங் கோட்டை வட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.26.71 இலட்சம் மதிப்பிலான இல வச வீட்டுமனை பட்டவிற் கான ஆணைகளையும், கடையநல்லுார் வட்டத்தில் 123 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பிலான இல வச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், சங்கரன் கோவில் வட்டத்தில் 215 பயனாளிகளுக்கு 3.56 இலட் சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், திருவேங் கடம் வட்டத்தில் 17 பயனாளி களுக்கு ரூ.14,61 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் என மொத்தம் 8 வட்டங்களில் 763 பயனாளி பயனாளிகளுக்கு ரூ.20.33 சுளுக்கு 1.69 கோடி மதிப்பி இலட்சம் மதிப்பிலான இலலான இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் வழங்கபபட்டது. பொதுமக்களின் தேவைக ளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்கள் கேட் டறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி வட் டாட்சியர் பட்டமுத்து, கடை யநல்லுார் வட்டாட்சியர் கடலைமணி,, செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன், உதவி மக்கள் தொடர்பு அலு வலர் ராமசுப்பிரமணியன் மற்றும் துணை வட்டாட்சி யர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.