செங்கோட்டை முத்துசாமி பூங்கா-மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்தார்
1 min read
Red Fort Muthusamy Park-M.K.Stalin opened with a video presentation
10.3.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள நகராட்சி முத்துசாமி பூங்கா வளாகத்தில் புணரமைப்பு பணிகள் சுமார் ரூபாய் 159.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலைஞர் நகரப்பற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 148.01 லட்சம் மானியத்திலும், அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலமாக ரூபாய் 11.39 லட்சம் முழு மானியத்திலும் பூங்கா புணரமைப்பு நிறைவு பெற்ற பூங்கா வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் தலைமை செயலக அலுவலகத்தில் இருந்து காணாளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, நகராட்சி ஆணையாளா், சுகந்தி(பொ) நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, நகராட்சி பொறியாளா் முகைதீன்அபுபக்கர், சுகாதார ஆய்வாளர் மாதவராஜ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவரும், முன்னாள் நகர திமுக செயலாளருமான எஸ்.எம்.ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள், பேபி, மேரி, இசக்கியம்மாள், இசக்கிதுரைபாண்டியன் முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், செங்கோட்டை நகர திமுக நகர்ச திமுகசெயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சண்முகராஜா, நகர பொருாளா் நடராஜன், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், வார்டு கழக செயலாளர்கள் குட்டிராஜா, சேட் (எ)சேக்மதார், நகராட்சி அலுவலா்கள், மற்றும் பணியாளா்கள், துாய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.