June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட முகாம் – துவக்க விழா

1 min read

Sri Paramakalyani College, Country Welfare Project Camp – Inauguration Ceremony

10.3.2024
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்கள் 120, 177, 178 சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் கடையம் ஊராட்சி ஒன்றியம், பாப்பான்குளம் கிராமத்தில் துவங்கியது.

பாப்பான்குளம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழாவில் ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி
மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி இறை வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.
ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் துவக்க விழாவிற்குத் தலைமையேற்று நாட்டு நலப்பணி திட்ட முகாமினை துவக்கி வைத்தார்.

நாட்டு நலப்பணி திட்ட (177) அலுவலர் பேராசிரியை . சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். பேராசிரியர். செந்தில் குமரன் திட்ட அலுவலர் அணி எண் 178 நாட்டு நலப்பணி திட்ட முகாமின் நோக்கம் பற்றி உரையாற்றினார்.

பாப்பான்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் சமூக ஆர்வலர் இசக்கி பட்ட முத்து ஆகியோர் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
முடிவில் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியின் திட்ட அலுவலர் (அணி எண் 120) முனைவர் பாலசுப்ரமணி யன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.