திப்பணம்பட்டி திமுக நிர்வாகி மறைவு- உதவி
1 min read
Thippanapatti DMK executive passes away
11.3.2024
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் திப்பணம்பட்டியில் உடல்நல குறைவினால் காலமான திமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் ஆறுதல் கூறியதோடு நிதி உதவியும் வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், திப்பணம்பட்டி முன்னாள் திமுக கிளை செயலாளர் ராஜன் உடல் நலக் குறைவினால் காலமானார்.
தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் திப்பணம்பட்டி முன்னாள் திமுக செயலாளர் ராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10, 000 நிதியுதவி வழங்கினார். மேலும் தாய் மற்றும் தந்தையை இழந்த ராஜன் அவர்களது மகன் மற்றும் மகளின் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை விடுதியின் கட்டணத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.