திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு- ஊராட்சி மன்ற தலைவி கைது
1 min read
DMK union secretary murder case- panchayat council president arrested
18/4/2024
சென்னை, வண்டலூர் அருகே கடந்த மாதம் 29ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராமுதன் கொலை வழக்கில் முக்கிய நபராக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி விஜயராஜ் இருந்தது அம்பலம்.
ஊராட்சி மன்ற தலைவி செல்வியுடன், அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.