குற்றாலம் ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை – புகையிலை,.பிளாஸ்டிக் பறிமுதல்
1 min read
Food safety officer action raid at Courtalam hotel – tobacco, plastic seized
1.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன உணவு பொருட்கள் தடை செய்யப்பட்ட புகைகளை பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதமும் விதித்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் வல்லம் கிராமத்தில் இரண்டு கடைகள் மற்றும் ஒரு உணவகத்தில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிர மணியன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கெட்டுப்போன அரிசி மற்றும் கோதுமை 72 கிலோவும், அழுகிய பழங்கள் 3 கிலோவும், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட தேயிலை ஒரு கிலோவும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இரண்டு கடைகளில் இருந்த 2.800 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.7000/- மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு
குற்றாலம் அருகே உள்ள மேலகரம், குடியிருப்பு, நன்னகரம் மற்றும் வல்லம் கிராமத்தில் 9 இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் காவல்துறை அதிகாரிகளு டன் இணைந்து ஆய்வு செய்தார்.
அப்போது இரண்டு கடைகளில் இருந்து 16.169 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஒரு கடையில் இருந்து 1.250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த மூன்று கடைகளுக்கு ரூபாய் 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006 இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின் இரண்டு கடைகள் மூடப்பட்டன.
தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் நடத்தி வரும் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.