தென்காசி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது
1 min read4 persons arrested for making homemade bomb near Tenkasi
1.4.2023
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த நான்கு பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை விட முயற்சித்தனர்.காவல்துறை யினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுரேஷிடம் விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டு கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப் பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்திய தாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ்(வயது 34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக்(வயது 25), சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர்(வயது 19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா (வயது 35) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.