June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தொகுதியில் காயத்ரி ரகுராம் பிரச்சாரம்

1 min read

Gayatri Raghuram Campaign in Tenkasi Constituency

5.4.2024
தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து கழக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி கழக கூட்டணி கட்சி வேட்பாளர், புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுரண்டை பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் மாவட்டக் கழகச் செயலாரும். முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் காயதரி ரகுராம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக மகளிரணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பேசிய தாவது:

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கழகம் சார் பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நல்லவர், வல்லவர் மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்க கூடியவர் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங் கள், அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற முதல் தொகுதியாக தென்காசி இருக்கும் என்பதில் ஐய மில்லை. பாஜக தம்மை ஒருபுறம் பழிவாங்க துடிக்கிறது.

மறுபுறம் திமுக நம்மை பழி வாங்க துடிக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி பொதுமக்கள் ஆதரவுடன் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல மைச்சர், புரட்சித்தமிழர், எடப்பாடியார் தலைமை யில் கழகம் அமோக வெற்றி பெறும்.

பாஜகவை பொறுத்தவரை புரட்சித்தலைவர்எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா இருவரது படங்களை வைத்து மரியாதை செலுத் துவது போல் செலுத்தி பொதுமக்கள் வாக்குகள் சேகரித்து விடலாம் என்று கணக்கு போடுகின்றனர். அது நிச்சயமாக நடக்காது. வாக்குகளை சேகரிக்க இது அவர்கள் நடத்தும் நாடகம் என்பது ஊர் அறிந்த விஷயம், மோடியா லேடியா என்று கேட்ட புரட்சித்தலைவி அம்மா கட்சி இது. மக்களுக்கு நல்லது செய்துவிட்டு வாக்கு கள் கேட்கலாம் தவறில்லை. ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. கடந்த 10 ஆண்டு பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத் தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் 15 லட்சம், வங்கி சுணக்கில் செலுத்துவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட் சியைப் பிடித்து விடலாம் என்று குறுக்கு வழியில் அர சியல் நடத்தி வருகின்றனர்.

எனவே பெரியவர்கள், தாய்மார் கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் தாங்கள் மட்டும் அல்லாது தங்களைச் சார்ந்த வர்களையும் இரட்டை இலை சின்னத்திற்கும், கூட்டணி சின்னத்திற்கும் வாக்களிக்க வைத்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்த லைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முக சுந்தரம். ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ் இருளப்பன், அதிமுக நகர செயலாளர்கள் சுரண்டை சக்திவேல் தென்காசி வே.சுடலை பொதுக்குழு உறுப்பினர் தென்காசி கசமுத்து, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சேர்மபாண்டி, பாலமுருகன், வெள்ளபாண்டி, காதர், குணம். ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ் புவனா ஐடி விங் ஜெகன் சங்கர், கண்ணன், வைரமுத்து, தென்காசி நகர நிர்வாகிகள் முத்துகுமார சாமி, கருப்பசாமி ராஜா, முத்து சிதம்பர அய்யப்பன், திப்பணம்பட்டி ராமசாமி. சுரண்டை சங்கர் மற்றும் தேமுதிக. புதிய தமிழகம். எஸ்டிபிஐ, பார்வர்டு ப்ளாக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள், கழக . தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.