தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
1 min read
Police conduct intensive vehicle checks at Tamil Nadu-Kerala border
5.4.2024
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக கேரளா எல்லையில் போலீஸ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளு மன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்ட மன்ற தொகுதிகளில் வாக் காளர்களுக்கு பணப்பட்டு வாடா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகி றதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர். நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிக ளில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும்பணம், பரிசுப் பொருட்கள் உள் னிட்டவைகளை பறிமுதல்செய்து வருகின்றனர்.
இதேபோன்று கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது கட்டமாக வருகிற 26ம் தேதி 20 தொகு திகளுக்கும் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோள தமிழக எல்லையான ஆரியங்காவில் போலீசா ரின் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியங்காவில் தமிழக காவல்துறை மற்றும் தென் மலை காவல்துறையினர் தலைமையில் வாகன தணிக்கையை தீவிரப்ப டுத்தியுள்ளது. வாக்காளர் களுக்கு வழங்கப்படுவதற் காக கொண்டு வரப்படும் பணம் பரிசு பொருட்கள், மது போன்றவற்றை தடுக் கும்விதமாக்கேரள மாநில போலீசார் தென்மலை எஸ்ஐ பிரகாஷ் பிள்ளை, சிவில் போலீஸ் அதிகா ரிகள் விஷ்ணு, ஜெயேஷ். ராகுல், கிரண் ஆகியோர் தலைமையில் இந்த சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரியங்காவு ஐயப்பன் கோவில் முன் தென்மலை. போலீசாரும். உதவி சாவடி போலீசாரும், தமிழகத்தில் இருந்து திரும்பி வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வரு கின்றனர். ரூ.50,000 வரை வைத்திருப்பதில் பிரசனை இல்லை. அதிக தொகை வைத்திருப்பவர்கள் தெளிவான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக அளவில் குண்டுக் கல், ஜல்லி எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல் லும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.