தென்காசியில் உலக சாதனைக்கான வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
1 min read
World Record Voter Awareness Rally in Tenkasi
7.4.2024
தென்காசி மாவட்டத்தில் 615 கிராமிய கலைஞர்கள் மற்றும் 7387 மகளிர்கள், 49 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பிரமாண்ட பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி இன்று (06.04.2024) 615 கலைஞர்கள் மற்றும் 7387 மகளிர்கள், 49 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பிரமாண்ட பேரணியினை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் திரு.ஏ.கே கமல் கிஷோர்.இ.ஆ.ப தலைமையில் நடைபெற்றது.
மக்களவை தேர்தல் 2024- தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.சங்கரராமன் இப்பேரணியில் கலந்துக்கொண்டார். இப்பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மதுரை ரோடு வழியாக குத்துக்கல்வலசை வரை நடைபெற்றது.
இப்பேரணி உலக சாதனைக்காக அமைப்பை சேர்ந்த திருமதி.ரக்ஷிதா தலைமையிலான குழு ஆய்வு செய்து பேரணியை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் .ஏ.கே கமல் கிஷோர். பேசியதாவது.
தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாகளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 615 கிராமிய கலைஞர்கள் மற்றும் 7387 மகளிர்கள், 49 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பிரமாண்ட பேரணி பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது என தெரிவித்தார்.
இப்பேரணியில் சிலம்பம், பொம்மலாட்டம், முளைப்பாரி எடுத்தல், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம், மேளம், நாதாஸ்வரம், இசைகுழு இசை வாசித்தல், தப்பாட்டம், வில்லுப்பாட்டு
போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை கூறிக்கொண்டே பேரணியில் உற்சாகமாக கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணி முடிவடைந்த குத்துக்கல்வலசை விழா மேடையில் அமைப்பினர் உலக சாதனை சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்கள். மேலும், இந்த உலக சாதனைக்காக விருது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட அலுவலர் .ஏ.கே.கமல் கிஷோர்,விருது மகளிர் திட்ட இயக்குநர் .இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி அவர்களுக்கும், Mentor விருது மகளிர் திட்ட உதவித்திட்ட அலுவலர் வி.எம்..சிவக்குமார் அவர்களுக்கும் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது, மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ், சமூகநலத்துறை அலுவலர் செல்வி.மதிவதனா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர.முரளி சங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் நரசிம்மன், அமர்சேவாசங்க செயலாளர் எஸ்.சங்கரராமன, மகளிர் திட்ட உதவிதிட்ட அலுவலர்கள் வி.எம்.சிவக்குமார், எம்.கலைச்செல்வி, எம்.மாரீஸ்வரன், இ.சாமத்துரை, ஏ.பிரபாகர், பொ.டேவிட் ஜெயசிங் ஆகியோர் கூட்டு முயற்சியால் இந்த உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது.
இப்பேரணியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர்
திட்ட வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் கடின உழைப்பு இந்த உலக சாதனைக்கு மிகவும் தூண்டு கோலாக அமைந்தது. இப்பேரணியில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகப் பணியாளர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், தென்காசி மாவட்ட பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.தென்காசி காவல்நிலைய அதிகாரிகள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்திருந்தனர். இப்பேரணிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.