June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி – புளியங்குடி அருகே பறக்கும் படை நடவடிக்கை்- 2.24 கோடி பறிமுதல்

1 min read

Tenkasi – Flying Squad operation near Puliangudi- 2.24 crore seized

10.4.2024
தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி விலக்கில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட ரூ.2.24 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி விலக்கில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாலுச்சாமி தலைமையில் அதிரடி வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியே செங்கோட்டை யில் இருந்து புளியங்குடிக்கு வந்த டாடா டோயட்டா கார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. வாகனத்தில் 7 பைகளில் தலா ரூ.32 லட்சம் வீதம் ரூ.2.24 கோடி பணம் கட்டுக்கட்டாக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வாகனத்தை. அருள்தாஸ் மகன் சந்திர சேகரன் ( வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட
ரூ.2.24 கோடி பணத்தை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாலுச்சாமி, காவலர் முத்துக்குமார், லிங்கத்துரை ஆகியோர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்..

செங்கோட்டையில் இருந்து தென்காசி, அகரக்கட்டு. கடையநல்லூர், புளியங்குடி, நகரம், நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டது அதிகாரிகள் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.