June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மூதாட்டி எரித்துக் கொலை-2 குழந்தைகள் காயம்- தீ வைத்தவர் தற் கொலை

1 min read

Old woman burnt to death – 2 children injured – Arsonist commits suicide

11.4.2024
பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடியை சேர்ந்த உடையான் மனைவி குருவம்மாள்(52)அங்குள்ள
முனியாண்டி என்பவரது தென்னந்தோப்பில் வேலை செய்து வருகிறார்.அதே தோப்பில் வேலை செய்து வரும் ஊரக்குடியை சேர்ந்த செல்லையா மகன் ஆறுமுகசாமியும் வேலை பார்த்து வருகிறார். ஆறுமகசாமியின் மனைவி ஏற்கனவே இறந்துள்ளார்.

தோப்பில் வேலை பார்த்து வரும்
குருவம்மாள் மகள் வனிதாவிற்கும், நிலையாம் படியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் குரு என்ற மகனும், 12 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.இதனிடையே வனிதாவின் கணவர் கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து சென்று விட்டார்.இதையடுத்து தோப்பில் வேலை பார்த்து வரும் ஆறுமுகசாமி வனிதாவை கல்யாணம் செய்து கொடுக்கும்படி குருவம்மாளிடம் கேட்டுள்ளார்.இதை மறுத்த குருவம்மாள் வனிதாவை பாம்பூரை சேர்ந்த லேசர் நெல்சன் பீட்டர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.பின்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் மலேசியா நாடு சென்று விட்டார்.

இந்நிலையில் ஆறுமுகசாமி
வனிதாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை என ஆத்திரத்தில் இருந்தார். இதனால் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த குருவம்மாள், அவரது பேரன் குரு,பேத்தி திவ்யதர்ஷினி ஆகியோர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளார். இதில் உடலில் தீ மளமளவென பிடித்து எரிந்ததில் குருவம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இரு குழந்தைளும் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தீ வைத்து எரித்த ஆறுமுகசாமி பூச்சி மருத்து குடித்து இறந்துள்ளார்.

தகவல் தெரிந்ததும் எமனேசுவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இறந்த இவரது உடலையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் பொதுவக்குடி, பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.